2011/02/25

மருத்துவ குறிப்பு பாகம்=4

உணர்வுகளும் உணர்சிகளும்

திருமணம் ஆன ஒரு கணவர் எழுதியிருந்த கேள்வியைப் படித்தேன். தனது மனைவியுடன் நெருங்கும் போதே என் உணர்வுகள் கிளைமாக்ஸ¨க்கு வந்து விடுகிறது என்று வேதனைபட்டிருந்தார். உணர்ச்சிகளின் வேகத்தால் அப்படி நிகழ்வு ஏற்படுகிறது. திருமணத்துக்கு முன் அளவுக்கதிகமாக உணர்ச்சிகளை காட்டி மாஸ்டர் பேஷனில் ஈடுபடுபவர்களுக்கு இந்தமாதிரியான பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது.
அந்தப்பிரச்னைகளைப் போக்க மனக்கட்டுப்பாடு அவசியம். வெறுமனே மனக்கட்டுபாடு பற்றி பேசினால் உணர்ச்சிகளுக்கு வடிகால் ஏது? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு உடற்பயிற்சிகள் கைகொடுக்கும். காலையில் வாக்கிங், ஜாக்கிங், உடல் தேக பயிற்சிகள் செய்ய வேண்டும். செக்ஸ் ரீதியான சிந்தனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் உணவு பழக்க வழக்கத்தையும் மாற்ற வேண்டும். பொதுவாக உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். அளவுக்கதிகமான சூடு, வெப்பம் இருந்தாலே உணர்வுகள் வேகமாக வெளியேறிவிடும். எனவே, உணர்ச்சிகள் சூடாக இருந்தாலும், உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். அப்போது தான் தாம்பத்ய வாழ்க்கையில் சுகம் காண முடியும்.
பெண்கள் பலரும் தங்களது பீரியட்ஸ் பற்றி கேட்டிருந்தனர். இதுவும் உடல் ரீதியான மாற்றம்தான். இதுவும் தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்படும் சங்கமத்தால், விளையும் பிரச்னை தான். நீங்கள் மகளிர்நல மருத்துவரை அணுகி, உங்களது சந்தேகங்களைத் தெளிவாகச் சொன்னால், டிரீட்மென்ட் மூலம் நீங்கள் குணமாகலாம்.
வாழ்க்கையில் தங்களது லட்சியத்தில் வெற்றிக் கொடியை ஏற்றியவர்கள், தாம்பத்ய வாழ்க்கையில் சரியான வாழ்க்கைத்துணை அமையாமல் தோல்வியை அடைந்திருக்கிறார்கள். அப்படியே அமைந்தாலும், தாம்பத்ய சுகம் இல்லாமல் தவிக்கிறார்கள். இது ஒரு வேதனை தான் என்றாலும், ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்னைகளை தீர்ப்பது என்பது கடினமாக இருந்தாலும், முடிந்தவரை மனரீதியான பிரச்னைகளை தீர்ப்பது எளிதல்லவா?
சில இளைஞர்கள் நீலப் படங்களையும், பண்பாட்டை மீறிய கற்பனை உறவுகளையும் பார்த்து சலனப்படுவதாக கூறியிருந்தார்கள். உணர்ச்சிகளும், உறவுகளும் நேரான பாதையில் தான் செல்ல வேண்டும்.
சாலையில் காரை ஓட்டிக் கொண்டு சீரான வேகத்தில், சாலை விதிகளை மனதில் கொண்டு எதிரே வரும் வாகனங்கள் மோதாமல் இருப்பதற்காக, கார் ஸ்டீரிங்கை நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, எந்தவித விபத்தும் இல்லாமல் செல்கிறோம். அதைவிடுத்து தாறுமாறாக காரை ஓட்டினால் மோதி விபத்துக்குள்ளாக வேண்டியது வரும்.
அதுபோலத்தான் நமது உடலை நன்கு பேணி காத்து, மனநிலையை சீரான கட்டுப்பாட்டுக்குள் வைத்து உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டால் சந்தோஷம் தானாக வரும். இதை அனைவரும் பின்பற்றினாலே போதும்.
இனி வரும் நாட்களில் உங்களது வாழ்க்கையில் சுகமே...சுகமே...

2011/02/21

மருத்துவ குறிப்பு பாகம்=3

காய்கறிகளும் அதன் பயன்களும் !!!

இன்றைய நிலையில், 10 நபரில் 4பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள். உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் இது போன்ற நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:

1) வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

2) வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

3) வாழைக்காய்: இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

4) பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

5) சேப்பங்கிழங்கு: கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

6) பீட்ரூட்: கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

7) வெண்டைக்காய்: போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

8) கோவைக்காய்: வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.

9) முருங்கைக் காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.

10) சுண்டைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

11) சுரைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

12) குடைமிளகாய்: வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

13) சௌசௌ: கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

14) அவரைக்காய்: புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

15) காரட்: உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

16) கொத்தவரங்காய்: இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

17) கத்தரி பிஞ்சு: கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.
 

கொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள்‏!!

உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு மூல காரணம் கொழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா என்று தேடிப்போக வேண்டாம். கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.

இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது உணவில், நாளொன்றுக்கு ஒரு சுவை என்ற விகிதத்திலாவது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது ஆயுர்வேதம். உங்களது எடையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவு வகைகள் கீழே:

1) மஞ்சள்: மஞ்சளை நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அதில் உள்ள குர்க்குமின் எனப்படும் ஒருவகை வேதிப்பொருள் கெட்ட கொழுப்பை கரைக்கவும், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.அத்துடன் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ரத்தம் உறைவதை தடுப்பதோடு இதய நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

2) ஏலக்காய்: வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் கொழுப்பை எரித்து கரைக்க உதவுகிறது. மேலும் ஜீரணத்திற்கும் மிகச்சிறப்பான பங்காற்றுகிறது.

3) மிளகாய்: மிளகாய் சேர்க்கப்பட்ட உணவுகள், கொழுப்பை எரிப்பதாக கூறப்படுகிறது.அத்துடன் அது வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுவதோடு, மிளகாயை சாப்பிட்ட 20 நிமிடங்களிலேயே கலோரிகளையும் எரிக்கிறது.

4) கறிவேப்பிலை: கறிவேப்பிலையை உங்களது உணவில் நீங்கள் தினமும் எடுத்துக்கொண்டால், அது உங்களது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் உடம்பிலுள்ள கொழுப்பு மற்றும் நச்சு பொருட்களையும் அது வெளியேற்றிவிடுகிறது.நீங்கள் அதிக உடல் எடையுடன் இருந்தால் தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை பொடியாக அரிந்து மோர் போன்ற பானங்களுடன் அருந்தவோ அல்லது சாப்பாட்டுடன் சேர்த்து உண்ணவோ செய்யலாம்.

5) பூண்டு: கொழுப்பை கரைக்கும் சக்திவாய்ந்த உணவு வகைகளில் ஒன்று பூண்டு.இதில் உள்ள சல்பர் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுவதோடு கொழுப்பையும், ஊளை சதைகளையும் குறைக்கிறது.

6) கடுகு எண்ணெய்: மற்ற சமையல் எண்ணைகளுடன் ஒப்பிடுகையில் இது கொழுப்பு குறைந்த எண்ணை ஆகும். அத்தியாவசிய வைட்டமின்களை கொண்டுள்ள இது கொழுப்பை குறைப்பதோடு, இதயத்திற்கும் மிகவும் நல்லது.

7) உளுந்தம் பருப்பு: உளுந்தம் பருப்பில் வைட்டமின் ஏ,பி,சி, மற்றும் ஈ ஆகியவை ஏராளமாக உள்ளதோடு, கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பல தாதுக்களும் நிறைந்துள்ளன. குறைந்த கொழுப்பு சத்து உடையது என்பதால் உடல் மெலிய பரிந்துரைக்கப்படும் உணவு வகைகளில் உளுந்தும் ஒன்று.மேலும் புரதம் மற்றும் நார்சத்தும் அதிகம் உள்ளதோடு, ரத்தத்திலும் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

8) தேன்: உடல் பருமனுக்கு இது ஒரு வீட்டு வைத்தியமாகவே உபயோகப்படுகிறது.உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்க உதவுவதோடு, வழக்கமான செயல்பாடுகளுக்கு தேவையான சக்திக்கு அதனை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது.தினமும் காலையில் 10 கிராம் அல்லது ஒரு மேஜைக்கரண்டி தேனை சுடு நீருடன் கலந்து அருந்தலாம்.

9) மோர்: உயிர் ஆகாரமாக கருதப்படும் மோர் இலேசான புளிப்பு சுவையுடையது.8.9 கிராம் கொழுப்பும், 157 கலோரிகளும் கொண்ட பாலுடன் ஒப்பிடுகையில் இதில் வெறும் 2.2 கிராம் கொழுப்பும், 99 விழுக்காடு கலோரியும் உள்ளது. அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் கொண்ட மோரை தினமும் அருந்துவதால் உடல் எடை குறையும்.

10) சிறு தானியங்கள்: சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களில் நார்சத்து மிகுதியாக உள்ளதோடு, கொழுப்பை உறிஞ்சவும்,பித்த நீரை பிரிக்கவும் உதவுவதோடு, கொழுப்பை கரைக்கவும் செய்கிறது.

11) பட்டை, கிராம்பு: இந்திய சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, உடலில் குளுகோஸ் அளவையும், கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.

நன்றி: B. ASHRAF KHAN - மின் மடல் மூலம்.
 
 

புதினாக்கீரையும் அதன் மருத்துவ குணங்களும் !!!

வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புபீசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம், இயற்கையான குடும்பக்கட்டுப்பாடு திட்ட முறை ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும். மருத்துவக் குணங்களுடன் மனத்தை மயக்கும் மணத்தையும் இக்கீரை பெற்றுள்ளது. எல்லா உணவு வகைகளிலும் மணம் ஊட்ட இக்கீரையை அயல் நாடுகளில் சேர்க்கின்றன. இதற்காகவே தோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் தொட்டியிலேயே இக்கீரையைப் பயிர் செய்கின்றனர்.


1) உலர்ந்த புதினாக் கீரையைப் பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் உடனே குணமாகும். வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும், இசிவு நோய்க்கும் அரியமருந்து புதினாக் கீரையாகும். அப்போதுதான் பறித்த புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானமும் ஆகும். நன்கு பசியெடுக்கும், ஒருகப் சாற்றில் தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசமும் தேனும் சேர்த்து அதிகாலையில் அருந்த வேண்டும். (புதினாச்சாறு தயாரிக்க 50கிராம் கீரையே போதும்) இப்படி அருந்தினால் காலை நேர வயிற்றுப்போக்கு, பித்தமயக்கம், காலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், சிறுநீர்ப்பைகளில் உள்ள கல்லடைப்புகள், வயிற்றுப்பொருமல், குழந்தைகளின் மலக்குடலில் உள்ள கீரைப் பூச்சிகள் முதலியன உடனே குணமாகும்.

2) உணவு உடனே செரிமானம் ஆகும். ஒரு கப் புதினாச் சாறு அருந்த விருப்பம் இல்லை என்றால், மூன்று வேளையும் தலா ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றில் தேனையும் எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு முன்பாக அருந்தினால் போதும், மேற்கண்ட அனைத்து நன்மைகளும் கிட்டும். புதினா இலைகளைப் பச்சையாகவும் மென்று தின்னலாம். அனைத்து மருத்துவ நன்மைகளும் கிடைக்கும். வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறு உள்ளவர்கள் புதினாத் துவையல், புதினாசட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். புதினாக்கீரையுடன் புளி, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு முதலியவற்றைச் சேர்த்து, முதலில் வதக்கி பிறகு அரைத்துத் துவையல் செய்ய வேண்டும். அடிக்கடி வயிற்றவலியால் வருந்துபவர்கள் இந்த முறையில் துவையல் செய்து, பலகாரம், சாதம் முதலியவற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் வயிற்று வலி பூரணமாய்க் குணமாகும்.

3) இக்கீரையைப் பச்சடியாகக் சமைத்துச் சாப்பிட்டாலும் வாந்தி, பசியின்மை அகலும். புதினாக் கீரையுடன் இஞ்சியும், மிளகும் சேர்த்துப் பச்சடி தயாரிக்க வேண்டும். மூச்சுவிடச் சிரமப்படுபவர்களும், ஆஸ்தமா நோயாளிகளும், எலும்புருக்கி மற்றும் வறட்டு இருமல், சளி முதலியவற்றால் அவதிப்படுபவர்களும் பின் வருமாறு உட்கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றுடன் தலா இரு தேக்கரண்டி வினிகர், தேன், நான்கு அவுன்ஸ் காரட் சாறு ஆகியவற்றைக் கலந்து, தினமும் மூன்று வேளை அருந்த வேண்டும். இது சிறந்த மருத்துவ டானிக் ஆகும். மேற்கண்ட நோய்களுக்கு வேறு எம்மருந்து உட்கொள்பவரும் இந்த டானிக்கை உட்கொள்ளலாம். இது கட்டியான சளியை நீர்த்துவிடக் செய்துவிடுகிறது. டி.பி. மற்றும் ஆஸ்துமா தொடர்பான நோய்க்கிருமிகள் வந்து தாக்கமுடியாதபடி நுரையீரல்களுக்கு நல்ல ஊட்டச்சத்தையும் இந்த டானிக் வழங்குகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. அதனால் ஆஸ்துமாகாரர்கள் ‘கர்புர்’ ரென்று மூச்சுவிடச் சிரமப்படாமல் நிம்மதியாய் இரவில் தூங்கலாம்.

4) பச்சையாக மென்று புதினாக்கீரையை சாப்பிட்டால் பல் ஈறுகள் பலம் பெறும். பல் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கலாம். பற்சிதைவும் தடுக்கப்படும். பற்கள் விழுவதும் தாமதப்படும். மேலும் கீரையை மெல்லுவதால் நாக்கில் உள்ள சுவை நரம்புகள் மீண்டும் சக்தி பெறுகின்றன. இதனால் இனிப்பு, உறைப்பு போன்ற எல்லாவிதமான சுவையுள்ள உணவு வகைகளையும் நன்கு ருசித்துச்சாப்பிட முடியும்.

5) உலர்த்தப்பட்ட புதினாக் கீரையைப் பொடி செய்து பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் காமாலை, வாதநோய், காய்ச்சல் முதலியவை குணமாக, மேற்கண்ட நோய்கள் குணமாகும்வரை, இரு சிட்டிகை புதினாப் பொடியைச் சோற்றிலோ ஒரு டம்ளர் தண்ணீர் கலந்தோ சாப்பிட வேண்டும். அவ்வாறு மூன்று வேளை உட்கொள்ள வேண்டும்.
தினமும் காலையும் மாலையும் தேயிலைத் தூளிற்குப் பதிலாகப் புதினாத் தூளைப் பயன்படுத்தித் தேநீர் தயாரித்து அருந்தினால் ஒவ்வொரு நாளும் புத்தம் புது துடிப்புடன் கழியும், சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் ஏற்படும். புதினாத்தேநீர் தயாரிக்கும் போது பாலும் சேர்த்துத்தான் தயாரிக்க வேண்டும். பால்சேர்த்துத் தயாரிக்கப்பட்ட புதினாத் தேநீர் வயிற்றுவலியைப் போக்கி நலம் பயக்கும்.

6) புதினாக்கீரையைக் கஷாயமாய்த் தயாரித்து, அதைக் கொண்டு வாயை நன்கு கொப்புளித்தால் பாடகர்கள் இனிமையான குரல் வளத்தைத் தொடர்ந்து பெறுவார்கள்; பேச்சாளர்கள் தொண்டைக்கட்டு இல்லாமல் உரத்த குரலில் நன்றாகப் பேசமுடியும். பாட்டுக் கச்சேரி செய்யுமுன்பு இந்தக் கஷாய நீர் கொண்டு வாய் கொப்பளித்து விட்டுப் பாட ஆரம்பித்தால் குரல் பிசிறின்றி ஒலிக்கும். மேற்படி புதினாக் கஷாயத்தில் ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்த பிறகே வாயைக் கொப்புளிக்க வேண்டும்.

7) ஆயுர்வேத மருத்துவத்தில் கெடுதல் விளைவிக்காத குடும்பக்கட்டுபாட்டு மருந்தாகப் புதினாப்பொடி திகழ்கிறது. கரு உருவாவதைத் தடுக்க நினைக்கும் பெண்கள், தாம்பத்தய உறவுக்கு முன்னால், ஒரு தேக்கரண்டிப் பொடியை வாயில் போட்டுத் தண்ணீர் ஊற்றிக்கொண்டால் போதும். மாதவிடாய் தாமதமானால், மூன்று அல்லது நான்கு நாள்கள், ஒரு தேக்கரண்டிப்பொடியைத் தேனில் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதமாவது தடுக்கப்படும்.

8) முகத்தில் பருக்கள் உள்ளவர்களும், வறண்ட தோல் உள்ளவர்களும் இரவில் படுக்கைக்குச் செல்லும் போது, புதினாக் கீரையைச் சாறாக்கி அதை உடலிலும், முகத்திலும் தடவிக் கொள்ள வேண்டும். காலையில் இரண்டு தேக்கரண்டி புதினாக்கீரைப் பொடியைத் தேன்கலந்து உட்கொள்ள வேண்டும் அல்லது தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். இத்தனை சிறப்புக்கள் கொண்ட புதினாக் கீரையின் தாயகம், ஐரோப்பா, பண்டைய ரோமானியர்களும் கிரேக்கர்களும் புதினாவை அறிந்திருந்தார்கள். கிரேக்க மருத்துவர்கள் இக்கீரையைப் பல விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம் முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தினர். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஜப்பானியரும் சீனரும் மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகையாக இக்கீரையைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றும் இஸ்லாமிய நாடுகளில் புதினாவை முக்கிய மருந்தாக மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். (இதன் விஞ்ஞானப் பெயர் : மின்த்தி ஸ்பைகாட்டா) புதினாக்கீரை மூலம் தினமும் புத்துணர்ச்சி பெறலாம் என்பது உறுதி.
 
 

பப்பாளியும் அதன் பயனும் !!!

ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள் மற்றும் வீட்டில் எளிய முறையில் இவைகளை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம். மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இது சிறந்த மருந்தாகும். கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

இதன் பலன்கள்: சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.

* பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

* பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

* பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

* நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

* பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

* பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

* பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

* பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

* பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

* பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

* பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

* பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்
 
 

பூண்டும் அதன் மருத்துவ குணமும்!!!

தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் பூண்டு!: பூண்டு வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

பலன்கள்: பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். மூட்டு வலியைப் போக்கும். வாயுப் பிடிப்பை நீக்கும். ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீ­ர்ச் சத்து 62.0 விழுக்காடும், புரோட்டின் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நார்ச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே.

பூண்டின் இன்றியமையாத பயன்கள்: பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும். பால்+பூண்டு+தேன் கலவையை தினமும் பருகி வர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்­ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டுப் பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.

பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.

பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும். நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்
 
 

நீரிழிவுக்கு கறிவேப்பிலை!!! சிறந்த மருந்து!!

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டுமென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்.
 
 

தண்ணீர் அதிகம் குடிபதனால் ஏற்படும் பலன்கள்!!

பிப்.6:உலகிலேயே மனிதன் மட்டுமே பூமியைக் குடைந்து தண்ணீரை எடுத்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான். ஆனால் மற்ற உயிரினங்கள் தண்ணீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துகின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சூரிய ஔி படும் தண்ணீரை மட்டுமே விலங்குகளும், மற்ற உயிரினங்களும் குடித்து தனது எலும்பு வளர்ச்சியை மேம்படுத்துகின்றன என்கின்றனர், இயற்கை வைத்தியர்கள்.

தண்ணீரானது நமது உடலில் நான்கு விதமான முக்கிய பணிகளைச் செய்கிறது. உடலில் இருந்து ஜீவ சத்துக்களைக் கரைத்து திரவமாக உடலிலுள்ள செல்களுக்கு எடுத்துச் செல்கிறது.
மேலும் நமது உடலிலுள்ள ரசாயன பொருள்களுடன் சேர்ந்து கரைந்து உடல் முழுவதும் பரவுவதற்கு அவசியமாகிறது. நம்முடைய உடலுக்கு வெப்பம் மற்றும் குளிர்ச்சியில் சமநிலையை உண்டாக்குவதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

நுரையீரல் வழியாகவும், சருமங்கள் வழியாகவும் அழுக்குகளை வியர்வை மூலமாகவும், சளி மூலமாகவும் வெளியேற்றுகிறது. நமது உடம்பிலுள்ள திசுக்கள் விஷமாகாமல் தடுத்து, ஆக்ஸிஜனை உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு கொடுத்து உதவுகிறது. முக்கியமாக நாம் சாப்பிட்ட உணவுகள் நல்லபடியாக செரிமானம் ஆவதற்கு தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது.

மனிதன் வாழ்வதற்கு தினமும் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். தண்ணீர் இல்லாமல் பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ முடியாது. தண்ணீர்தான் மனித இனத்துக்குத் தேவையான உணவு பொருள்கள், தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய அடிப்படைக் காரணியாக விளங்குகிறது.

"மனித இனத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது சூரிய ஔி பட்ட தண்ணீர்தான்" என்று கூறியுள்ளார் ஹிப்போக்ரேடிஸ். இவர் மருத்துவ உலகின் தந்தையாக போற்றப்படுபவர். இங்கிலாந்தில் சில மருத்துவமனைகளில் தண்ணீர் சிகிச்சைகள் செய்யப்படுவது தற்போது பிரபலமாகி வருகிறது.

சூரிய ஔி பட்ட நீரைக் குடிக்கும்போது அதன் ஒவ்வொரு சொட்டிலும் சூரியசக்தி பரவி 30 சதவீதம் கூடுதலான ஆக்ஸிஜனும், நைட்ரஜன் சக்திகளும் கிடைக்கின்றன. இவை சரீரத் திலுள்ள திசுக்களை குணப்படுத்தி சக்தியைக் கொடுத்து நன்கு செயல்பட வைக்கின்றன.
சூரிய ஒளிக்கதிரானது கெடுதலான பாக்டீரியா கிருமிகளை ஒழித்து நீரை சுத்தப்படுத்துகின்றன என்கிறார் பிரபல தண்ணீர் சிகிச்சை நிபுணர். உடலைச் சுத்தபடுத்துவது குளிப்பதன் முலம் நடைபெறுகிறது. உடலின் உள் உறுப்புகளை சுத்தப்படுத்துவது தண்ணீர் குடிப்பதன் முலம் நடைபெறுகிறது.
 

உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? படியுங்கள் இதை!!

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்: அச்சச்சோ! மறந்து போச்சே... இன்று நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.

* பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.

* அதேபோல இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.

* ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.

* சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.

* கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது. இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.

மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைகள்தான். இரத்த ஓட்டக் குறைவும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
 

தாம்பத்தியம் பற்றிய ஒரு விழிப்புணர்வு.

உடலுறவின்போது வெளியேறும் விந்து சிலமணி நேரம் உடலிலேயே இருப்பதால் எந்த பாதிப்புகளும் ஏற்படாது. குழந்தை பெற விரும்பும் பெண்களுக்கு, உறவு முடிந்த்தும் போய் சுத்தம் செய்ய வேண்டாம். முக்கால் மணிநேரமாவது அதே பொசிஷனில் படுத்திருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இத்தகைய ஆலோசனை பெற்றுக் கொண்டவர்கள், உடலுறவுக்கு முன் சிறுநீர் கழிப்பது நல்லது. இல்லாவிட்டால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, உறவு கொண்ட பின் இருந்து கொண்டேயிருக்கும். சிறுநீர் கழிக்காமல் வெகுநேரம் பொறுத்துக் கொண்டிருந்தால் “யூரினரி பாதிப்புகள் ஏற்படலாம்.
நன்றி கமலா அவர்கள்
 

இலந்தை பழமும் அதன் மருத்துவ குணங்களும்!!

இலந்தை கனி மிக அதிகமான மருத்துவ குணம் கொண்ட ஒரு கனியாக விளங்குகிறது. 100 கிராம் இலந்தையில் 74% கலோரி,17 % மாவுப் பொருள், 0.8 % புரதம், மற்றும் தாது உப்புகள், இரும்புசத்துகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.

1) உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம்.

2) இதன் தாயகம் சீனா. வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீ. உயரம் வரை கூட வளரும்.

3) இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருந்து சக்திகள். மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம். கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

4) மயிர் புழுவெட்டு நீங்கும் இலந்தை இலைச் சாற்றினை உள்ளங்கை, உள்ளங்கால்களில்; தினம் பூசி வர அங்கு அதிக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.

5) இலந்தை மரத்தின் உள்பட்டைகளை உலர்த்திப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர ஆறாத புண் ஆறும்.

6) இலந்தை மரவேர் அரைத்து பூச மூட்டு வலி குணம் ஆகும்.

7) வேர்ப்பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றை 15 மி. அளவு குடிக்க மலச்சிக்கல் குணம் அடையும்.

இலந்தை பழமும் நினைவாற்றலும்:

1) தினம் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 இலந்தைப் பழங்களை உண்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் குணமாகும்.

2) இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஏற்றது.

3) இலந்தைப்பழம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. தொடர்ந்து சிலநாள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும். இலந்தை பழத்திற்கு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றலுண்டு
 
 
 

வலிமையான உடல் தேவையா?? படிங்கள் இதை!!

1) உங்களது உடல் வலிமைபெற, பலம் பெற தினமும் இரண்டு சாத்துக்குடி அல்லது ஆரஞ்சுப்பழத்தை சாறு பிழிந்து அந்த சாற்றுடன் 2 அல்லது 3 முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து சாப்பிட்டு வர உங்கள் உடல் பலம் பெரும், விந்து உற்பத்தி பெருகும்.
·
2) அரைக்கீரை, முருங்கை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலி கீரை போன்ற கீரை வகைகளில் ஏதாவது ஒன்றை தினமும் உணவுடன் சிறிது சேர்த்து வர கண்கள் குளிர்ச்சி பெறுவதுடன் உடல் வலிமை பெறும் மேலும் மல சிக்கலில் இருந்தும் பாதுகாப்பு பெறலாம்.
·
3) தூதுவளைப் பூவை சுத்தம் செய்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்துவர உடல் ஆரோக்கியம், பலம் பெரும். காலையில் வெறும் வயிற்றில் சிறிது இலவங்கத்தை இடித்து தூளாக்கி தேனில் கலந்து சாப்பிட்டுவர வர உடல் உறுப்புக்கள் பலம் பெறும். செம்பருத்தி மொட்டுகளை நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வர உடல் நிறம் கொடுக்கும், உடல் பலம் பெரும்.
 
 
 

2011/02/19

ஆண்களே முக்கியமாக


ஆண்களே முக்கியமாக இது உங்களுக்கே .. பலருக்கு ஏற்படும் கேள்வி

டாக்டர் நான் தினமும் சுய இன்பம் செய்கிறேன். இதனால் ஏதும் பிரச்னை வருமா?

அல்லது

டாக்டர், நான் பத்து வருடமாக தினமும் கையடிக்கிறேன், எனக்கு திருமணம் ஆகப் போகிறது. எனக்கு குழந்தை பிறக்காது என்று பயமாக இருக்கிறது

அல்லது

டாக்டர், நான் தினமும் கை முட்டி அடித்ததால், என் ஆண் குறி இப்போது பல இன்ச் சின்னதாகி விட்டது. தயவு செய்து நல்ல வழி சொல்லுங்கள்.



டாக்டரின் பதில்:

முதலில் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்: ரிலாக்ஸ்!

உங்கள் காம உணர்வு எதைப் பொறுத்து அமைகிறது தெரியுமா? உங்கள் ஹார்மோன் சுரப்பிகளைப் பொறுத்து. ஆண்களுக்கு டெஸ்டாஸ்டேரோன் (testosterone), பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன்களை உங்கள் உடல் எவ்வளவு சுரக்கிறதோ அந்த அளவுக்கு உங்களின் காம வேட்கை அதிகரிக்கும். “அளவுக்கு மீறிய சுய இன்பம்” என்று ஒரு விடயமே கிடையாது. உங்கள் வாழ்க்கை தரத்தை பாதித்தால் மட்டுமே அது அளவுக்கு மீறியதாகி விடும். ஆண்களின் கைப் பழக்கம் அவன் டீன் ஏஜ் பருவம் அடியும் முன்பே தொடங்கி விடும். சராசரியாக பனிரெண்டு வயதில் ஆண்கள் சுய இன்பம் செய்ய தொடங்கி விடுவார்கள். பெண்களோ, அவர்கள் மற்றவர்களிடம் கேட்பது, அல்லது படிப்பதின் மூலமே சுய இன்பம் செய்யத் தொடங்குகிறார்கள். சுய இன்பம் செய்வது ஆண்களுக்கோ, பெண்களுக்கு வெட்கப் படவேண்டிய விஷயம் அல்ல.(©tamildirtystories) உங்கள் வீட்டில் ஒருவர் சுய இன்பம் செய்வதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், தயவு செய்து அவர்களை கிண்டல் செய்யாதீர்கள். அவர்களை புரிதலோடு நடத்துங்கள். நீங்கள் ஒரு விடலைப் பையனையோ, பெண்ணையோ அவமானப் படுத்தினாலோ, அல்லது தண்டித்தாலோ, அவர்களின் செக்ஸ் பற்றிய குற்ற உணர்வு தோன்றி, பிற்காலத்தில் மன நோயாக வாய்ப்பு உண்டு.

இதைப் படிக்கும் நீங்கள், உங்கள் வாழ்க்கையில் சுய இன்பம் அனுபவிக்காமல் இருந்தாலோ, அல்லது உங்கள் தோழனோ/தோழியோ எப்போதுமே சுய இன்பம் அனுபவித்ததில்லை என்று ஜம்பம் அடித்துக் கொண்டாலோ, இந்த புள்ளி விவரங்களை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

1) 95% ஆண்கள் சுய இன்பம் செய்கிறார்கள்.
2) 75% பெண்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சுய இன்பம் செய்து உள்ளார்கள்.

நீங்கள் சுய இன்பம் செய்யாதவராக இருந்தால், நீங்கள் தான் சற்று வினோதமான பழக்கம் உள்ளவர், மற்றவர்கள் அல்ல! உங்களை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் சுய இன்பம் செய்பவர்கள் தான்.
நீங்கள் தினமும் பலமுறை கை முட்டி அடித்தாலும், உங்கள் ஆண் குறி சின்னதாக வாய்ப்பில்லை. சுய இன்பம் செய்வதால் ஆண் உறுப்பு சிரியாதாகும் என்று சொல்ல எந்த விதமான மருத்துவ ஆதாரங்களும் இல்லை. நீங்கள் சிறிது நேரத்திற்கு முன் கை அடித்திருந்தால் உங்கள் குறி சிறுத்தோ, அல்லது லேசாக வெளிறிப் போன நிறத்திலோ தோன்றலாம். ஆனால், நிரந்தரமாக உங்கள் ஆண் குறி சிறுக்க வாய்ப்பில்லை. நீங்கள் 48 மணி நேரத்திற்கு சுய இன்பம் செய்யாமல் விட்டு விட்டால், உங்கள்
குறி பழைய நிலைக்கு வந்து விடும். ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தினமும் சுய இன்பம் செய்வது என்பது ரொம்ப இயல்பான விஷயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது பிரித்தானிய அரசாங்கம் , விடலைப் பசங்களை (பொண்ணுங்களையும்) தான் , தினமும் ஒரு முறை “சுய இன்பம் செய்யுங்கள்” என்று உற்சாகப் படுத்தி உள்ளது. ஏன் தெரியுமா? பால் வினை நோய்களையும், டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் ஆவதையும் தடுக்கத் தான். நம்ப மாட்டீங்களே! இந்த லிங்கை சொடுக்கி பார்த்துக் கொள்ளுங்கள்!

நீங்கள் பெண்ணாக இருந்து கொண்டு சுய இன்பம் செய்கிறீர்களா? தயவு செய்து இது பற்றி குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்.பெருமளவு பெண்கள் தாம் சுய இன்பம் செய்யும் முறை ரொம்ப விசித்திரமானது என்று எண்ணுகிறார்கள்.இது தவறானது. கிட்டத்தட்ட எல்லா சுய இன்ப முறைகளும், மிக விசித்திரமானவையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டு பிடிக்கப் பட்டவை தான். நீங்கள் கீழ் கண்ட வாறாக சுய இன்பம் செய்தால், அது மிகவும் இயல்பானது:

1) பொது இடங்களில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, உங்கள் தொடை மற்றும் இடை தசைகளை இறுக்கி சுய இன்பம் செய்தல்.

2) நாற்காலி ஓரத்திலோ, அல்லது கதவின் கைப்பிடியிலோ உங்கள் பெண் உறுப்பை வைத்து தேய்ப்பது.

3) உங்களின் பெண் உறுப்பின் இதழ்களையோ, அல்லது பருப்பையோ (கிளிடோரிஸ்) தலை அணையிலோ, அல்லது கரடி பொம்மை போன்ற மிருதுவான பொம்மைகளின் மேல் அழுத்தி உரசி, சுய இன்பம் செய்தல்.

4) விரலை விடுவதோ, அல்லது வைப்ரேட்டர்கள் உபயோகப் படுத்துவதோ படு சாதாரணமான விஷயம் என்று சொல்லத் தேவை இல்லை.

ஆண்கள் சுய இன்பம் செய்வதால், ஆண்மை குறைந்து போக வாய்ப்பே இல்லை. இது உங்கள் ஆண்மையை பெருக்கவே செய்கிறது. நீங்கள் கை அடித்தால், உங்கள் உறுப்பு பாதையில் உள்ள பழைய விந்துக்களை வெளியேற்றி, புதிய, மேலும் அதிகம் சீறிப் பாயக் கூடிய விந்து தயாராகிறது. இதனால், கர்ப்பம் அடைய வாய்ப்புகள் கூடுமே தவிர, குறைவதில்லை. நம்பவில்லை எனறால், இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மருத்துவ குறிப்பு பாகம்=2

முதுமையில் தாய்மை!

இப்போதெல்லாம் திருமணம் ஆன தம்பதியர் பலர், குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட்டு வருகிறார்கள். இவர்களில் பலர், தங்கள் லட்சியத்தை எட்டுவதற்காகவும், குடும்பத்தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்காகவும் குழந்தை பெறுவதை சிறிது காலத்திற்கு தள்ளிப்போடுகிறார்கள். 
இப்படி, குழந்தை பெறுவதை தள்ளிப்போட்டு, முதுமையில் தாய்மைப்பேற்றை அடையும் பெண்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவதாக சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் ஆய்வு கட்டுரை ஒன்று சமர்பிக்கப்பட்டது.

அதில் மேலும் கூறப்பட்டு இருந்ததாவது:-


"பெண்கள் வயது அதிகம் ஆன காலகட்டத்தில் தாய்மைப்பேறு அடைய விரும்புவது என்ற பிரச்சினை உலகின் பல நாடுகளிலும் காணப்படுகிறது.

செயற்கை கருத்தரிப்பு முறை கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இந்த காலதாமதமான தாய்மைப்பேறு என்பது மருத்துவ அறிவியலின் உதவியுடன் அடையக் கூடியதாக ஒன்றாகவே ஆகியுள்ளது.

ஆனால், மருத்துவ ரீதியாக இது சாத்தியமாகிவிட்டாலும் 40 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள் உடல்ரீதியாக பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள்.

மேலும், இவ்வாறு பிறக்கும் குழந்தைகளும் மருத்துவ ரீதியான பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.இதுதவிர, சமூக, உளவியல் ரீதியான பிரச்சினைகளும் இம்மாதிரியான காலதாமதமான தாய்மைப்பேறு காரணமாக ஏற்படுகின்றன...'' என்று, பல தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

நீங்களும் குழந்தை பெறுவதை தள்ளிப்போடும் தம்பதியர் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். குறித்த காலத்தில் விதைத்தால்தான் மகசூல் சரியாக கிடைக்கும் என்பது இதற்கும் பொருந்தும்.

மாரடைப்பு ஏற்படாமல் தடுத்துக் கொள்வது எப்படி?

இதயத்திலிருந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் தமனியின் சுவர்கள் தடித்துப் போவதால் இதய நோய்கள் ஏற்படுகின்றன.

புகை பிடித்தல், குடிப்பழக்கம், மன அழுத்தம், அதிக கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிடுதல், தவறான வாழ்க்கை முறை, அதிக ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் குறைத்தால் ரத்த நாளங்கள் சீராகச் செயல்பட ஆரம்பிக்கும்.

தினமும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி ஆகியவை ரத்த நாளங்கள் பழுதடையாமல் செயல்பட உறுதுணையாக இருக்கும்.

ஆரோக்கியமான வாழக்கை முறை:

பொதுவாக 50 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கும் 70 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கும் ரத்தக் குழாய்களில் அடைப்பு அதிகமாக ஏற்படுகிறது. நல்ல பழக்கவழக்கம் உடையவர்களுக்கும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் ரத்த நாளங்கள் நன்றாகச் செயல்படும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

சீரான உணவு, சீரான உடற்பயிற்சி, சரியான மருந்து இருந்தால் ரத்த ஓட்டத்தை தமனி, சிரைகளில் சீர்படுத்தி இயத்தை வலுப்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.

மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்:

ஒரு குறிப்பிட்ட மருந்தின் பெயரையும், அதை ஏன் சாப்பிடுகிறோம் என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மருந்துகளை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

மருந்தைச் சாப்பிட மறந்துவிட்டால் அதற்காக விடுபட்ட மருந்தை அடுத்த வேளை சேர்த்துச் சாப்பிடக் கூடாது. பிற மருந்துகள் குறிப்பாக ஆஸ்பிரின், வைட்டமின் மாத்திரைகள் ஆகியவற்றை டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிடவும்.

இதய நோயாளிகள் தங்களது மருந்துகளை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டாம். அதேபோன்று அடுத்தவர்களின் மருந்துகளை இதய நோயாளிகள் வாங்கிச் சாப்பிட வேண்டாம். சில மருந்துகள் ஏற்கனவே சாப்பிடும் மாத்திரைகளுடன் ஒத்துப்போகாது. அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே, டாக்டரின் ஆலோசனையுடன் சாப்பிட வேண்டும். வெளியூர் செல்லும்போது தேவையான அளவு மருந்துகளை எடுத்துச் செல்லவும்.

ஏனெனில் உங்களுக்குத் தேவையான மருந்துகள் நீங்கள் போகும் நகரத்தில் கிடைக்காமல் போகலாம். குழந்தைகளுக்கு எட்டாதவாறு, சூரிய ஒளிபடாத இடத்தில் மருந்துகளைப் பாதுகாப்பாக வைக்கவும்.

மது வேண்டாம்:


டாக்டரிடம் செல்லும்போது அவர் அளித்த சீட்டை மறக்காமல் எடுத்துச் செல்லவும். மதுப்பழக்கம் இருந்தால், அது இதயநோயின் மருந்துகளை வேலை செய்யவிடாமல் பாதிப்பை ஏற்படுத்தும்.


 

மாதவிலக்கு நின்ற பிறகு உடலுறவு வைத்துக் கொண்டால் வலி ஏற்படுவது ஏன்?

தாம்பத்ய உறவுக்கான ஆர்வத்தைத் தூண்டுவது ஹார்மோன்கள். வயதுக்கு வந்தது முதல் மெனோபாஸ் அடையும் வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு ஹார்மோன் சுரப்பு இருக்கும்.

மாதவிலக்கு நின்றதும், இந்த ஹார்மோனின் அளவு குறைவதால், செக்ஸில் ஆர்வம் குறைவதோடு பெண் உறுப்பின் பசைத்தன்மைக் குறைந்து இறுக்கமாகிவிடுகிறது.

இதனால்தான் உறவின்போது வலியும், எரிச்சலும் ஏற்படுகிறது.

மருந்து வகைகள், க்ரீம் போன்றவற்றின் மூலமாக இந்தக் குறைபாட்டை சரிசெய்ய முடியும்.

மருத்துவரை நேரடியாக அணுகி, அவர் பரிந்துரைக்கும் மருந்து வகைகளை உட்கொண்டால் நல்லது.

பாலுறவு சிக்கல்களைக் கண்டறிவது எப்படி?

பெரும்பாலான பாலியல் பிரச்சனைகள் மனம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. இதனால் உடல் ரீதியான காரணங்கள் இல்லை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. திருமணமான தம்பதியர் என்னிடம் ஆலோசனைக்கு வந்தனர்.

கணவனால் பூரணமாக பாலின்பச் செயலில் ஈடுபட முடிய வில்லை என்றும், இதன் காரணமாக தமக்கு மிகுந்த துன்பம் உள்ளதாக அந்த பெண்மணி கூறினார்.

காரணத்தை ஆராய்ந்த போது, அவள் மீது ஒரு வகை துர்நாற்றம் வீசுவதாகவும், அந்த நாற்றம் உடல் உறவின் போது அதிகமாக இருப்பதாகவும், அதன் காரணமாக தன்னுடைய உறுப்பு விறைப்பினை பெறுவதில்லை என்றும் காரணம் சொன்னார் அந்த வாலிப வனப்பு மிக்க இளைஞன்.

வேறு ஒரு ரகசியத்தையும் அவர் கூறினார். வேறு பெண்களோடு மிகவும் திருப்தியான உறவைக் பொள்ள முடிவதையும், அவனிடம் பெறும் அனு பவத்திற்காகவே சில குடும்ப பெண்கள் கூட தன்னிடம் வருவதாக சொன்னார்.

இதைப்போலவே மனம் சார்ந்த பிரச்சனைகளில், பாலியல் சிக்கல்களும் ஒரு வெளிப்பாடாக அமைகிறது. பாலியல் பிரச்சனைகள் பற்றி முக்கிய மாக அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியது இரண்டு அம்சங்கள்.

ஒன்று இந்தப் பிரச்சனைகள் பொதுவானவை. மற்றொன்று தற்காலிகமானவை. எல்லோருடைய வாழ்விலும் பாலினப் பிரச் சனைகள், சிக்கல்கள் வந்து பின்பு மறைந்து போய் இருக்கும். பாலுறவு சிக்கல்கள் - இரு பாலினரிடமும் தோன்றுவதாக இருந்தாலும், ஆண்களே இதனை வெளியில் காட்டிக் கொள்கின்றனர்.

பெண்கள் தங்களின் பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே வைத்து சுமக்கின்றனர். சிலர் தங்களின் நம்பகமான ஒரு சிலரிடம் பேசுவதுண்டு. இன்றுள்ள சமூக அமைப்பு உளநோய்கள் பற்றி பிறரிடம் பேசுவதைக் கூட களங்கமாக எண்ணுகிறது.

தயக்கம் காட்டுவ தற்கு இது ஒரு காரணம். எனவே மன நல ஆலோச கர்கள் எப்படி இப்பிரச்சனையை அணுகுவது என்பதில் நுட்பம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு கேட்காத, இடையூறு இல்லாத தனிமையான இடமாக இருப்பது அவசியம். குடும்ப பிரச்சனைகளுக்கு பின்னணியில் பாலின்ப சிக்கல் இருக்கிறதா என அறிவது அவசியம். உடல் உறவு திருப்தியாக உள்ளதா என்பதை அறிய குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது? கடைசி யாக உறவு கொண்டது எப்போது என்பது போன்ற விபரங்களைக் கேட்பது அவசியம்.

கேள்விகள் கேட்கும் போது ஏனோ தானோ எனக் கேட்காமல் ஈடுபாட்டுடன், உண்மையான அக்கறையுடன் கேட்பது நல்லது. பாலியல் விழிப்புணர்வு உள்ளவர் களிடம் நேரடியாக கேட்கலாம்.

என்னிடம் ஆலோ சனைக்கு வந்த ஒரு பெண்மணி, தனது வயதுக்கு வந்த இரண்டு மகள்களின் முன்பாகவே, “எனது கணவர் தினந்தோறும் உடல்உறவு கொள்ள முயற்சிக்கிறார். இவர்கள் திருமணமாகாமல் வீட்டிற்கு இருக்கும்போது, இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறார்.

முடியாது என்றால் அன்று ஒரு ரணகளமாகவே வீடு மாறி விடுகிறது. என்ன செய்வது?” என்று கேட்டார். இப்படி கேட்டது அவரது மகள்களிட மிருந்த ஆதங்கத்தை சமனப்படுத்த பயன்பட்டது. அவர் தான் அப்படி என்றால் “ஏன் எங்களது அம்மா அதற்கு சம்மதிக்க வேண்டும்?” என்று அவர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலாக அமைந்தது தான் அந்த தன்னிலை விளக்கம், பாலுறவு சிக்கல் பற்றி, முழுமையாக, அதன் வகை, தன்மை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனை எப்போது ஏற்பட்டது? எல்லா நாட்களிலும் உள்ளதா? எப்போது கூடுதலாக உள்ளது? முன்பு எப்படி இருந்தது? இது பற்றி துணைவியின் அபிப்ராயம் என்ன? என்பது பற்றி அறிவது அவசியம்.

பெண்களோடு பேசும் போது, ஒரு பெண் உதவியாளரை வைத்துக் கொள்வது நல்லது. திருச்சியைச் சேர்ந்த ஒரு மனநல மருத்துவர், தன்னிடம் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாக ஒரு பிரச்சனை எழுந்தது.

என்னிடம் ஆலோசனைக்காக அழைத்து வரப்பட்ட ஒரு புதுமணப் பெண் தன்னை இவ்வாறு பலாத்காரம் செய்து உடல் உறவு சுமுகமாக இருக்க என்ன செய்வது, எப்படி செய்வது? என்பதைச் சொல்லித் தருவதாக கூறி பின்பு மயக்க மருந்து கொடுத்து தவறாக முயற்சி செய்ததாகக் கூறினார்.

மயக்க மருந்து கொடுக்கும் நிபுணர்கள் மீதும் இப்படி ஒரு குற்றச்சாட்டு கூறுவதுண்டு. எனவே மனநல ஆலோசகர்கள், தங்களோடு ஒரு பெண் உதவியாளரை வைத்துக் கொள்வது பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.

வங்கி ஒன்றில் பணிபுரியும் கணேஷ் தன்னால் முன்பு போல உடல் உறவில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்றும், விறைப்பில்லாமையுடன், பெண் உறுப்புக்குள் செலுத்த இயலாமையும் உள்ளது என்றும் வேதனைப்பட்டார்.

இதற்கான காரணத்தை அறிய அவரது மனைவியிடம் கலந்து ஆலோசித்த போதும் சரியான தெளிவு கிடைத்தது. வீட்டில் ஒரு பிரச்சனை காரணமாக அவர்கள் வெளியேறி, வேறு ஒரு வீட்டிற்கு சென்றனர். அங்கு பூரணமான தனிமையான இட வசதி இல்லை.

பல குடுத் தனங்கள் உள்ள வீடு. அங்கே உடல் உறவு கொள்ள போதுமான பாதுகாப்பு இல்லை என்கிற ஒரு பயம் கணேஷ்க்கு ஏற்பட்டது. யாராவது பார்ப்பார் களோ, வந்து விடுவார்களோ என்கிற பயம் வாட்டியது.

பக்கத்து போர்ஷன்காரர்கள் வெளியே சென்றிருந்தாலும் கூட, அவர்கள் எப்போது திரும்பி வந்து கதவைத் தட்டுவார்களோ... என்கிற பதைபதைப்பு வாட்டும். இதனால் ஏற்பட்ட மனத்தடை, திரும்பவும் தனது சொந்த வீட்டிற்கு சென்ற பிறகும் தொடர்ந்தது.

மன அமைதிப் பயிற்சியை அளித்து அவரை பழைய நிலைக்குத் திருப்பினேன். ஓரினச்சேர்க்கை, சுய பாலின்பச் செயல், இரவில் விந்து வெளியேறுவது போன்ற பிரச்சனை களுக்கு ஆலோசனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

இச்செயல் களால் ஏற்படும் மனப் போராட்டங்கள், குற்ற உணர்வுகள் களையப்பட முறையான சைக்கோ தெரபி தேவைப்படுகிறது.

யோனி இறுக்கம் என்றால் என்ன?

உடலுறவின் போது பெணகளின் தன்னிச்சையான தசை இறுக்கமே யோனி இறுக்கம் ஆகும். இதனால் உடலுறவின் போது வலி எற்படும்.

சிலவேளைகளில் ஆண்குறியை உள்ளே செலுத்தமுடியாத அளவுக்கு யோனி இறுக்கம் காணப்படும்.

இது இளம் பெண்களுக்கு பொதுவாக காணப்படும். எதனால் எற்படுகிறது? இது ஒரு தனிக்காரணியால் ஏற்படுவது அல்ல.

பல காரணிகளின் சேர்க்கையே. உள ரீதிலான காரணங்கள். பதற்றம்/ மனஉளைச்சல் குழந்தை பருவ அனுபவங்கள். வலி மீதான பயம். கர்ப்பமடைந்திருத்தல். பாலியல் தொடர்பான தப்பான எண்ணங்கள். கற்பழிப்பு, போன்ற பழைய அனுபவங்கள்.

பொளதீக ரீதியான காரணிகள்.. குழந்தை பிறப்பு. ஓமோன் மாற்றங்கள். மாதவிடாய் நிறுத்தம்.

சிகிச்சை முறைகள் என்னென்ன? இது உடல்/உள ரீதியாக குணப்படுத்தலாம்.

ஆலோசனை நேரங்களை ஒதுக்கி பிரச்சினைகளை கதைப்பதன் மூலம, அனேகமான நேரங்களில் பிரச்சினையை தீர்க்கலாம். மன அழுத்தம் போன்ற நோய்கள் காணப்படின் அதற்குரிய சிகிச்சையை கொடுக்க் வேண்டும்.

விரல்களால் அல்லது வேறு உபகரணங்களால் சிறிது சிறிதாக யோனி துவாரத்தை விரிவுபடுத்தலாம். பாலியல் ஆசை குறைவு. இது உடலுறவுக்கு எற்படும் ஆசை குறைவதாகும்.

இதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பிரச்சினை எற்படலாம்.

எதனால் எற்படுகிறது? பல காரணங்கள். தொடர்பில் பிரச்சினை மன் அழுத்தம். ஒரு துணையுடன் வெறுத்துப்போதல் களைப்பு மன உளைச்சல் தொடர்பாடல் பிரச்சினைகள்.

இருவரும் தனியாக இருக்கும் நேரம் குறைவு. பழையகஷ்டமான அனுபவங்கள் நோய்கள் நித்திரை குறைவு. ஒமோன் குறைபாடு. தெஸ்தெஸ்திரோன் குறைவு.

தடுப்பது எவ்வாறு?

தூக்கத்தை கூட்டலாம். மன உளைச்சலை குறைக்கவும் தொடர்பில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு. பாலியல் வாழ்க்கையை சந்தோசமாக்க வழிகள்.

எப்போது வைத்தியரை நாட வேண்டும்?

உங்கள் ஆசை குறைவு மூலம் கணவன் - மனைவி தொடர்பில் பிரச்சினை எற்படின் வேறு நோய் அறிகுறிகள்- களைப்பு, முகத்திலுள்ள முடி குறைதல், விதைகள் பருமனில் குறைதல்.

சிகிச்சை முறைகள் என்ன?

உங்கள் துணைவியிடம் உங்கள் நிலையை விளக்கி கூறவும். ஆலோசித்து இருவரும் நல்ல முடிவுக்கு வரவும். இருவருக்கும் பாலியல் ரீதியான ஆலோசனை வழங்கலாம்

முதன்முறையாக உறவில் ஈடுபடும்போது, வலி ஏற்படுமா?

பெரும்பாலான பெண்கள் முதன்முறை உறவில் ஈடுபடும்போது வலியை உணர்கிறார்கள்.

வலி உண்டாவதற்கு முதன்மை காரணமாக இருப்பது, பெண் உறுப்பை மூடி இருக்கும், சருமத்தின் உட்புற அடுக்கான 'கன்னி சவ்வு' முதன் முறை உறவு கொள்ளும் போது கிழிய நேரிடுவதே ஆகும்.

ஆனால் இது எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. உங்களுக்கு 'கன்னி சவ்வு ' இருக்குமானால், முதல் உறவின் போது, வலியோ, அல்லது சிறிய அளவிலான இரத்தப்போக்கோ ஏற்படலாம் அல்லது ஏற்படாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

சில பெண்கள் வலியை உணர்வதே இல்லை, அது போல் எல்லா பெண்களுக்கும் 'கன்னி சவ்வு' கிழியும் போது இரத்தப் போக்கு நிகழ்வதில்லை. சில பெண்களுக்கு 'கன்னி சவ்வு' இல்லாமலே இருக்கும். மேலும் சில பெண்களுக்கு, கன்னி சவ்வானது, முதன் உறவுக்கு முன்னரே கிழிந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.

இது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலேயோ, அல்லது விபத்திலோ, சுய இன்பத்தில் ஈடுபடுவதாலோ நிகழலாம். உறவில் ஈடுபட பால் ரீதியாக ஒரு பெண் தயாராகும்போது, அவளுக்கு தானகவே சுரக்கும் திரவமானது , உறவின் போது உராய்வை குறைக்கும். ஆனால் இது எல்லோர்க்கும் நிகழ்வதில்லை, அதே போல் இந்த திரவ சுரப்பு மட்டுமே, உறவினால் ஏற்படும் வலியை குறைக்க போதுமானதல்ல.

முதன்முறை உறவுகொள்வோர் தாங்கள் பால் ரீதியாக உடல் உறவுக்கு தயாரானவரா என்பதை உறுதி செய்துக்கொண்டு , பின்பு தயக்கம் ஏதும் இன்றி உறவில் ஈடுபடலாம். உறவின் போது உராய்வை குறைக்க, கிளிசரின் அற்ற முறையான திரவங்களை மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம்.

உறவுக்கு முன்பான, உங்கள் பொழுதை மகிழ்ச்சி தரும் சிற்றின்ப விளையாட்டுகளில் கழிப்பது, உங்கள் உறுப்பை உடலுறவின் போது ஊடுருவலுக்கு தயாரானதாய் மாற்றும். உறவின் போது வலியானது , உறுப்பின் ஆழத்திலும், அதிகமாகவும் இருக்குமானால், அது மேற்குறிப்பிட்டது போல் சாதாரணமாக எல்லோர்க்கும் நிகழ்பவை அல்ல.

உறவினாலான வலி கிருமிகளின் தொற்றுதலுக்கோ அல்லது வேறு ஏதாவது மருத்துவ நிகழ்வின் அறிகுறியாகவோ இருக்கவும் வாய்ப்பு உண்டு. பெரும்பாலும் இது, உங்கள் உறுப்பு பால் ரீதியாக உறவுக்கு இன்னும் தயாராகவில்லை என்பதன் அடையாளமாக கூட இருக்கலாம். எப்போதுமே நீங்கள் உறவு கொள்ளும்போது வலி இருந்தால், உடனடியாக நீங்கள் மருத்துவரை சந்திப்பதே நல்லது

திருமண வாழ்க்கை சிறக்க. . .!

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ துணையின் உற்சாக ஒப்புதல் இல்லாமல் காரியங்களைத் தீர்மானிக்க வேண்டாம் என டாக்டர் டி. காமராஜ் கூறினார்.

விவாகரத்தைத் தடுப்பது, திருமண வாழ்க்கையைச் சிறப்புடன் நடத்துவது ஆகியவை குறித்த இலவச கருத்தரங்கு சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் டாக்டர் டி.காமராஜ் பேசியது:

திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் தங்கள் துணைகளை தங்களில் சரிபாதியாக பாவித்துக் கொள்ள வேண்டும். கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவர் தொடர்ந்து விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது.

அப்படி விட்டுக் கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் தனது உரிமைகளை ஏன் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பிக்கும். இந்த எண்ணம் வாய்த் தகராறில் தொடங்கி, விவாகரத்து வரை செல்ல வாய்ப்பு உள்ளது.

எனவே தம்பதியர் தங்களின் எண்ணங்கள், குண நலன்கள், எதிர்பார்ப்பு உள்ளிட்டவை குறித்து தங்கள் துணையிடம் சரியான நேரத்தில், கண்ணியமான முறையில் தெரிவித்துவிட வேண்டியது அவசியம்.

திருமணமான ஆரம்ப காலத்திலோ, காதலிக்கும்போதோ பரிசுப் பொருள்களை அதிகமாக வாங்கி கொடுப்பது வழக்கம். நாளாக நாளாக அந்த குணம் குறைந்துவிடும். இதனால் சில தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பிக்கும்.

பரிசுப் பொருள்களின் மீதான ஈடுபாட்டால் அல்ல, தன் மீது உள்ள அன்பு குறைந்துவிட்டது என எண்ணம் தோன்றும் காரணத்தினால்தான் இவ்வாறு கருத்து வேறுபாடுகள் தொடங்கும்.

திருமணம் நடப்பது வரை உடல் தோற்றத்தின் மீது அதிக கவனம் கொள்பவர்களில் பலர், திருமணத்துக்குப் பிறகு கவனம் செலுத்துவதில்லை. இதனால் உடலின் எடை அதிகரித்து, தங்களின் எடுப்பான தோற்றத்தை இழக்க நேரிடுகிறது.

இதன் மூலம் தங்கள் துணையின் வெறுப்புக்கு ஆளாக நேரிடலாம். உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக, மிடுக்காக தம்பதியினர் வைத்துக் கொள்வது சிறந்தது. சிலரிடம் உள்ள வாய் துர்நாற்றம், வியர்வை நாற்றம் உள்ளிட்ட அநாகரிக பழக்கவழக்கங்கள் துணையிடம் வெறுப்பை ஏற்படுத்தும்.

துணையிடம் உண்மையை மறைக்க தொடர்ந்து பலர் முயற்சி செய்வது வழக்கம். இந்த விஷயத்தில் கணவனா அல்லது மனைவியா என்ற வேறுபாடு கிடையாது.

தங்களது இல்லற வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடுமோ எனத் தொடர்ந்து பலர் உண்மையை மறைத்து வருவார்கள். ஒரு நாள் உண்மை தெரியவரும் நிலையில், மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து விவாகரத்து வரை செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகும்.

தம்பதியர் ஒரு வாரத்தில் குறைந்தது 15 மணி நேரம் தனிமையாக இருக்க வேண்டும். தங்களுக்குள் பிரச்னை நிலவினால் 25 மணி நேரம்கூட செலவழிக்கலாம்” என்றார் டாக்டர் டி. காமராஜ்.

பெண் கருத்தரிப்பின்மை - காரணங்களும், தீர்வும்

ஹார்மோன் குறைபாடு இருக்கும் பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தியாகாமல் போய்விடும். இதனால் குழந்தைப்பேறு பாதிக்கப்படும்.

சில பெண்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. கருக்குழாய் அடைப்பு இருந்தால் கருத்தரிக்க வாய்ப்பே இல்லை.

ரத்தசோகை, புரதச் சத்துக் குறைவு ஆகியவையும் மலட்டுத்தன்மைக்கு காரணங்களாகின்றன. ஆணுக்கு விந்தணு குறைபாடு இருந்தாலோ அல்லது பெண்ணுக்கு கருமுட்டை பாதிப்பு இருந்தாலோ அவற்றை மருந்து கொடுத்து சரிப்படுத்தி விடலாம். கருக்குழாயில் அடைப்பு இருந்தால் அதை மருந்து கொடுத்து சரிப்படுத்த முடியாது.

இத்தகைய குறைபாடு உடையவர்களுக்கு சோதனைக்குழாய் முறை கைகொடுக்கிறது. ஆணின் உயிரணுக்களையும், பெண்ணின் கருமுட்டையையும் உடலுக்கு வெளியே இணைத்து கருவுறச் செய்து மீண்டும் கர்ப்பப் பையில் கொண்டு வந்து வைப்பதே சோதனைக்குழாய் முறையாகும்.

உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை இலண்டனில் உள்ள பான்ஹால் மருத்துவமனையில் 1978 ஜூலை 25ம் தேதி பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் லூயி பிரவுன்

மருத்துவ குறிப்பு பாகம்=1

எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ? 

 
எமது உடலின் செயற்பாடுகளுக்கு ஒட்சிசனுக்கு அடுத்ததாக அத்தியவசியாமான பொருள் நீர் என்றால் மிகையில்லை.
ஆனாலும் அநேகமானோர் உடலின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் போதியளவு நீரை அருந்துவதில்லை. ஒவ்வொருநாளும் நாம் பல்வேறு விதாமாக உடலில் இருந்து நீரை இழந்துகொண்டிருக்கிறோம்.

சிறுநீர், சுவாசம், வியர்வை, மலம் என பல்வேறு வழிகளினூடாக நாம் நீரை தினம்தோறும் இழக்கிறோம். இந்த நீர் மீண்டும் நமது உடலைச் சேருவது நாம் அருந்தும் நீர் மூலமாகவும், உணவில் உள்ள நீர் மூலமாகும்.

ஒருவருக்கு ஒருநாளைக்கு தேவையான அளவு நீர் அவர் மேலே சொன்ன வழிமுறைகள் மூலம் இழக்கும் நீராகும். அதுதான் வியர்வையான காலத்தில் அதிகம் நீர் வியர்வை மூலம் இழக்கப் படுவதால் அதிக நீர் உடலுக்குத் தேவை என்பதால் தாகம் அதிகரிக்கின்றது.

ஒருவர் ஒருநாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்பது அவரின் உடல் நிறை, அவர் வசிக்கும் காலநிலை, அவர் செய்யும் வேலையின் அளவு என்பவற்றில் தங்கியிருக்கிறது.

அண்ணளவாக ஒருவருக்கு ஒருநாளைக்குத் தேவைப்படுவது அவரின் ஒரு கிலோ உடல் நிறைக்கு 35ml நீராகும். இருந்தாலும் மேலே சொன்னதுபோல இந்த அளவு காலநிலை மாற்றம், மற்றும் வேலையின் அளவு என்பவற்றைப் பொருத்தும் மாறுபடும்.

சரியாக கணிக்கப்படாவிட்டாலும் அண்ணளவாக ஒருநாளைக்கு குறைந்தது இரண்டரை லீட்டர் நீராவது குடிப்பது அவசியமாகும்.

நீங்கள் இன்னும் சரியாக உங்களுக்குத் தேவையான நீரின் அளவைக் கணித்துக் கொள்ள விரும்பினால் இந்த சுட்டியில் உள்ள கணிப்பானில் உங்கள் தரவுகளைக் கொடுப்பதன் மூலம் கணித்துக் கொள்ள முடியும்.

உங்களுக்குத் தேவையான இந்த நீரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அருந்தலாம். அதாவது சூடாகவோ, ஆறியதாகவோ அல்லது பழச் சாறாகவோ. அதை உங்கள் விருப்பப் படி விரும்பிய அளவுகளில் குடித்துக் கொள்ளலாம்.(எத்தனை தடவையில் குடித்து முடிக்க வேண்டும் என்று கணக்கிடத் தேவையில்லை) ஆனாலும் அளவுக்கதிகமாக ஒரேயடியாக நேரை குடிப்பதால் மற்றைய வேளைகளில் கவனம் குறையலாம்.

இரவிலே அதிகம் நீரை அருந்தினால் சிறுநீர் கழிப்பதற்காக நித்திரை குழம்ப வேண்டியும் ஏற்படலாம். மேலே சொன்னதெல்லாம் ஆரோக்கியமான ஒருவருக்குத் தேவையான நீரின் அளவாகும்.

வாந்தி, வயிற்றோட்டம், காய்ச்சல் ஏற்படும் காலங்களில் நீரிழப்பு அதிகரிப்பதால் இன்னும் அதிகமாக நீர் அருந்த வேண்டி ஏற்படலாம்.

பால் போன்ற பள பள முகத்துக்கு!

*உணவில் காரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த காரமான உணவுகள் முகத்தில் பருக்களை அதிகமாக்கி, முகப் பொலிவையே கெடுத்து விடும் அபயம் உள்ளது.

*முப்பது வயதை கடந்தவர்கள் கடலைமாவுடன்,தக்காளிஜூஸ் சம அளவு எடுத்து கலந்து முகத்தில் போட்டு கொள்ளுங்கள்.

அரை மணி நேரத்தில் குளிர்ந்த தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் சருமம் சுருக்கமில்லாமல் பளபளப்பாக ஜொலிக்கும்.

*முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்துப் வந்தால் பொடுகு தொல்லை மறைந்து விடும். அதுமட்டுமல்ல, மயிர்க் கால்கள் வலுவாகி கூந்தலும் பளபளப்பாக மாறி விடும்.

வாழைத் தண்டின் மருத்துவ குணங்கள்!

வாழையின் உள் தண்டை சிறுசிறு துண்டுகளாக்கி வேறினை நீக்கி சமைத்து உண்ண சிறுநீர் பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சீதபேதி தாகம் தணியும்.

வாழைத் தண்டு காதுநோய், கருப்பை நோய்கள், ரத்தக் கோளாறுகள் ஆகியவற்றைக் குணமாக்கும். வாழைத்தண்டை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும்.

வெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரைத் தடவத் தேள், பூரான் ஆகியவற்றின் கடியினால் ஏற்படும் வலி குறையும்.

வாழைத் தண்டைச் சுட்டு, அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வர தீப்புண்கள், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். வாழைத் தண்டிற்குக் குடலில் சிக்கியிருக்கும் மயிர், நஞ்சு ஆகியவற்றை வெளிப்படுத்தும் குணமுண்டு.

வாழைப் பூவை வேகவைத்து பொரியல் செய்து உண்பதால் அஜீரணம் நீரழிவு நோய் நீங்கும். குளிர்ச்சியை உண்டாக்கும் வயிற்றுப் புழுக்களை ஒழிக்கும் பித்த நோய்களையும், இருமலையும் நீக்கும்.

வாழைப்பூச்சாற்றுடன் கடுக்காயைச் சேர்த்து அருந்த மூலநோய், ஆசனக்கடுப்பு நீங்கும்.

கைகால் எரிச்சல், வெள்ளைபடுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும். வாழைப்பூச்சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்தும் பருகலாம்.




2011/02/18

FILEகளைஐ அழிக்க

FILEகளைஐ அழிக்க முடியவில்லையா

Tamil Computer Tips Tamil Computer Magazine Computer Malar Tamil Computer Dictionary ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.

சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.

எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.

முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.

இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.

டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி! கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா! சந்தோஷமா!!
 
 
 

உங்கள் COPMPUTER ஐ சுத்தப்படுத்த சில வழிகள்

Tamil Computer Tips Tamil Computer Magazine Computer Malar Tamil Computer Dictionary உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:-
அனைவருக்கும் தங்களது கணினியை மிக வேகமாக்க ஆசை. இருப்பினும்அவர்கள் கணினியில் தேவை இல்லாத மென்பொருள்கள்,கோப்புகள்,நிரல்கள் என நிரப்பி தள்ளுவார்கள். கடைசியில் என் கணினி மிக மிக மெதுவாக வேலை செய்கிறது என்று குறை கூறுவார்கள்.சரி இதனையெல்லாம் கழற்றி கணினியை சுத்தம் செய்யலாம் என்று பார்ப்பார்கள் இறுதியில் அதுவும் செய்ய முடியாமல் தவிப்பார்கள். அவ்வாறு தவிப்பவர்கள் இந்த பதிவை படியுங்கள்:)


Revo Uninstaller:-
விண்டோசில் ஏற்கனவே Add/Remove program வசதி இருந்தும் சில நிரல்களை (program) நம்மால் முழுமையாக அகற்ற இயலாது. அந்நிலையில் இது போன்ற மென்பொருளை பயன்படுத்தவும். இந்த மென்பொருள் கழற்ற (uninstall) இயலாத மென்பொருள்கள்,நிரல்கள் ஆகியவற்றை எல்லாம் கழற்றி விடும்.அதனை தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்:-http://www.revouninstaller.com/

மீண்டும் நிறுவி கழற்றும் முறை (Reinstall to Uninstall):-
சில நேரங்களில் சில மென்பொருள்களை/நிரல்களை சரியாக கழற்ற இயலாது.அதற்கு காரணம் நிரல்களில் ஏற்பட்டுள்ள சிதைவு (corrupt). அதனால் நாம் அந்த மென்பொருள்/நிரலை திரும்ப நிறுவி (reinstall) கழற்ற முயல்வோம் ஆனால் அது "உன் கணினியை விட்டு போக மாட்டேன்" என்று அடம்பிடிக்கும்
.அப்போது இது போன்ற முறையை கையாளவும். முதலில் உங்களது கணினியை மறுதொடக்கம் (restart) செய்யுங்கள். பிறகு F8 விசையை (key) அழுத்திக் கொண்டே இருங்கள். அழுத்திய உடன் ஒரு திரை (screen) தோன்றும் அதில் Safe mode என்பதை சொடுக்கி பிறகு கழற்றி பாருங்கள்!

Rgistry cleaner:-
"தம்பி நீ சொன்ன இரெண்டுமே செய்து விட்டோம் ஆனா போவமாட்டங்குதே!" என்று கவலைப்படுவோர் இந்த மென்பொருளை பயன்படுத்துங்கள்
Ccleaner:- http://www.piriform.com/ccleaner
Auslogics:- http://www.auslogics.com/en/
இந்த இரெண்டும் நேரடியாக Program கோப்பில் (file) இருக்கின்ற கோப்பகத்தை (directory) அழித்துவிடும்.

தேவை இல்லாத கோப்புகளை அழித்தல்:-
என்ன உங்கள் தட்டு (hard disk) ஊசிப்போன வடை,பஜ்ஜி எல்லாம் வைத்திருக்கிறதா (அதாவது தேவையில்லாத cookies,temporary files, program installers, cookies, cached data, file fragments... ஆகியவற்றை எல்லாம் வைத்திருக்கிறதா:) அதனை அழிக்க மேலே உள்ள ccleaner மென்பொருளையே பயன்படுத்துங்கள்.

கணினியை பாதுகாப்பாக சுத்தப்படுத்த:-
நாம் எப்பொழுதும் கணினியை சுத்தப்படுத்தும் போது அதனை ஒரு தற்காப்பிற்காக சேகரிக்க மறந்துவிட்டு அனைத்தும் அழித்து விடுவோம். பிறகு அய்யய்யோ அனைத்தும் அழிந்து விட்டதே என கவலைப்படுவோம்:( கவலைபடாதீர் மக்களே அதற்கும் கைவசம் மென்பொருள் இருக்கிறது. இந்த மென்பொருள் பாதுகாப்பாக அனைத்தையும் ஒரு தற்காப்பிற்காக சேகரித்த (நீங்கள் குறிப்பிட்டது மட்டும்) பின்பு தான் அழிக்கும்.அதனால் இழந்ததை நீங்கள் எப்பொழுது வேண்டுமானால் மீட்டிக் கொள்ளலாம்.

Comodo system cleaner:- http://system-cleaner.comodo.com/

பெரிய கோப்புகளை அழித்தல்:-
நம் கணினியில் அதிகமாக மென்பொருள்கள் இருக்கிறதோ இல்லையோ! ஆனால் கண்டிப்பாக புதிதாக வெளிவந்த படங்கள்,விளையாட்டுக்கள்,ஒளித்தோற்றம்,பாட்டு ஆகியவையெல்லாம் நிரம்பி வழியும். அதனை எல்லாம் அழிக்க இந்த மென்பொருளை பயன்படுத்துங்கள்:-http://freshney.org/xinorbis/
இந்த மென்பொருள் உங்கள் தட்டை (hard disk) பரிசோதித்து (scan) எது அதிக அளவில் வைத்து இருக்கிறீர் எது குறைவாக வைத்து இருக்கிறீர் என்று அனைத்தையும் வரைபடம் (graph) போட்டு காண்பிக்கும்.இதனால் எந்த நிரல்,படம்... அதிகமாக இருக்கிறதோ அதனை நீங்கள் கண்டறிந்து அழித்துக் கொள்ளலாம்
 
 
 

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க

Tamil Computer Tips Tamil Computer Magazine Computer Malar Tamil Computer Dictionary நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.


இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க.

தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட Window தோன்றும்.

இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.கீழே உள்ள படத்தை பார்க்க.


உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும்.அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.

தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்க 
இங்கே கிளிக் செய்க
 
 

தொலைந்து போன CELL PHONE னின் INFORMATION ஐ பெற

Tamil Computer Tips Tamil Computer Magazine Computer Malar Tamil Computer Dictionary


பேசுவதற்கு  மட்டுமே பயன்பட்டு  வந்த  CELLPHONES இன்று   ஏராளமான செயல்பாடுகளை செய்ய பயன்படுகிறது.  VIDEO , AUDIO ,SMS   என செல்போன்களின் பயன்பாடு  விரிவடைந்து  உள்ளது.

இவ்வாறு  கையடக்க களஞ்சியமாக CELLPHONES மாறிவிட்ட இந்நிலையில்  செல்போன்களை தொலைத்து விட்டால்  அதனுடன் நாம் சேகரித்த தகவல்கள்  தொலைபேசி எண்கள்  முதல் வீடியோக்கள் வரை  அனைத்தும்  வீணாகிவிடும்.

இதுபோன்ற நேரங்களில்  பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். செல்போன்களில் இருக்கும் தகவல்களை  வேறு எங்காவது பத்திரப்படுத்தினால் மட்டுமே தகவல் இழப்பை தவிர்க்க முடியும். 

எனவே செல்போன்கள் தொலைந்துபோனால்   கவலைப்பட இனி தேவையில்லை. அவ்வாறு  செல்போன்களை  தொலைத்து    மன உளைச்சலில் இருப்பவர்கள் பின் வரும்  WEBSITE பயன்படுத்தலாம்.

இந்த இணையத்தளம்   நமது செல்போனில் உள்ள   அனைத்து தகவல்களையும் ஆன்லைனில் சேமிக்கும் வசதியை  http://www.mobyko.com/Home.do  என்னும்  இணையத்தளம்  வழங்குகிறது. பெரும்பாலும் இந்த வசதியை செல்போன்களுக்கு பயன்படுத்த முடியும்.
இந்த இணையத்தளத்தை பயன்படுத்த நாம் செய்ய வேண்டியது பின்வருவன :
 இந்த இணையத்தளத்திற்கு சென்று  நமது   செல்போன்  மாடலை தேர்வு செய்து , நமது  செல்போன் எண்ணை அளிக்க வேண்டும்.
உடனே நமது CELL PHONE NUMBERக்கு ஒரு செய்தி ( Message ) வரும். அந்த செய்தியில்  நமக்கு ரகசிய NUMBER அனுப்பி வைப்பார்கள். அந்த எண்ணை அடிப்படையாக வைத்து  ஒரு புதிய கணக்கை தொடங்க வேண்டும்.
புதிய   அக்கவுண்டை தொடங்கிய பின்னர்  நமது தொலைபேசிக்கு  அவர்களின் புரோகிராமை அனுப்பி வைப்பார்கள்.
   <=====> 
இதனை இணையத்தளத்தில் அளிக்கப்பட்டிருக்கும்   வழிமுறைகளை பின்பற்றி , புரோகிராமை நமது செல்போனில்  டவுன்லோடு செய்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு  நமது செல்போனில் உள்ள  வீடியோக்கள் ,  ஆடியோக்கள் அனைத்தும் ONLINEனில் சேமிக்கப்படும். 
அவ்வளவுதான் முடிந்ததது உங்களது வேலை. நமது செல்போன் தொலைந்து போனால் கூட புதிய செல்பேசிக்கு அனைத்து தகவல்களையும் கொண்டு வர முடியும்.

இந்த சேவையை அந்த இணையத்தளம் இலவசமாக அளிக்கிறது.